Tuesday, November 16, 2010

ஊழலின் ஊற்றுக்கண் ஜெயலலிதா


இன்று மத்திய அமைச்சர் ராஜா விவகாரத்தில் எவ்வளவு அரசியல் ஆதாயம் தேடமுடியுமோ அவ்வளவு ஆதாயம் தேட முயற்ச்சிக்கும் வாய்த்த ராணிக்கு நியாபக மறதி அதிகம் போலும், தான் செய்த ஊழல்கள் எல்லாம் தமிழக மக்கள் மறந்து போயிருப்பார்கள் என்ற எண்ணமோ?

இந்தம்மா சினிமாவில் சான்சு இல்லாததால் அரசியலில் வந்து ஏழைகளின் நிலத்தை அபகரித்தார், பல இடங்களில் பங்களாக்கள், முந்திரி தோட்டம், எஸ்டேட், லண்டனில் ஒரு நட்சத்திர ஹோட்டல், சசிகலாவின் உறவு மகனின் தடால் புடா பல ஆயிரம் கோடிகளில் நடத்திய யாருமே கண்டிராத (உழலில் கொள்ளையடித்த பணத்தில்) சென்னையில் அலங்கார கல்யாணம் ......

ஊழல் என்றால் என்னவென்று அறியாத உத்தமி தான் இந்த ஜெயலலிதா..... போட்ட கையெழுத்தையே நான் போடவில்லை என்று அந்தர் பல்டியடித்த வாய்த்த ராணி இன்று நரி போல் ஊளை இடுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.....

நீ நீதிபதி கண்டித்தும் எனது கையெழுத்து இல்லை என்று சாதித்தவர், நீ சொல்ல என்ன தகுதி உள்ளது என்னமோ காந்தி அவதாரம் போன்று சொல்கிறாய் ஊழலின் பொக்கிஷம் நீ உனது பழைய நாட்களை எண்ணிப்பார்....

இழப்புக்கும், ஊழலுக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம் மனித பிறவி.....

ஜனாதிபதிக்கு தந்தி அனுப்ப சொல்லும் உனக்கு கூடவே தமிழக மக்களை இன்னொரு தந்தியும் ஜனாதிபதிக்கு அனுப்ப சொல்ல வேண்டும். அது என்னவென்றால், எதற்காக என்றால், தமிழகத்தில் ஜெயலலிதா என்பவர் அளவுக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிய வழக்கு ஒன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, குற்றவாளி ஜெயலலிதா என்பவர் வாய்தா வாங்கியே பன்னிரண்டு வருடங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார். ஆகவே தமிழகத்தின் நலன் கருதி அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தந்தி அனுப்ப சொல்லுங்க அம்மா. அதே போல ஜெயலலிதா என்பவர் வெளிநாட்டில் இருந்து காசோலையாக பிறந்தநாள் பரிசு அந்நிய செலாவணி மோசடி வழக்கிலும் வாய்தா வாங்கி வருகின்றார். அதே போல 1993 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வருமான வரி, சொத்து வரிகளை இந்த ஜெயலலிதா கட்டாமல் வரி எய்ப்பு செய்த வழக்கு ஒன்றும் இருக்கின்றது, அதிலும் தக்க நடவடிக்கை எடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு ஜனாதிபதிக்கு தந்தி அனுப்ப சொல்லுங்கள் அம்மா. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

நீதி, நேர்மை, தர்மம், வெட்க, மானம், சூடு, சொரணை பற்றி பேச இந்த ஜெயாக்கு என்ன தகுதி இருக்கு. டான்சி ஊழலில் மாட்டி நாடே காரி துப்பினபோதும் பதவியை இறுக பிடித்துகொண்டவர். சோனியாவை மதிக்காத ஜெயா இப்போ போய் காலில் விழுகிறார். தேர்தல் கமிஷன் மீட்டிங் போது டெல்லி மீட்டிங் வளாகத்தில் சோனியாவை சந்திக்க வழியில் காத்து கிடந்தார். இளங்கோவனை தூண்டிவிட்டு DMK உறவை உடைக்க பார்த்து அந்த ஆளே வெளியேறும் நிலையில் திண்டிவனம் ராமமூர்த்தி போல இருக்கிறார்.