இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
Friday, January 29, 2010
மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வெற்றியின் ரகசியம் - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
அவர் பேசியதாவது: ஏழைகளுக்கு உதவத்தான் நான் மத்திய அமைச்சரானேன். வெறும் அழகிரியாக இருந்தால், நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். மத்திய அமைச்சர் எனில் உடனே கேட்பர். குடிநீர், சாலை வசதிகளை உடனே நிறைவேற்றுவர். முதல்வர் கருணாநிதி 1962ல், தஞ்சாவூரில் ஒரு பண முதலைக்கு எதிராக போட்டியிட்டார். நான் அப்போது தேர்தல் பணியாற்றினேன். கருணாநிதி இரவு, பகல் பாராமல் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று பார்வையிடுவார். கட்சி நிர்வாகிகள் அங்கு யாரும் இல்லையெனில் கண்டிப்பார். தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுவார். நான் அவரிடம் கற்றுக் கொண்டதால், தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறுகிறேன்.
சைதாப்பேட்டை (1967) தேர்தல் பணியின் போது, கருணாநிதியை கொலை செய்ய முயன்றனர். அவர் தப்பித்து குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு உதவி செய்தனர். துணிச்சலை நான் அவரிடம் கற்றேன்.திருமங்கலம் இடைத்தேர்தலில், நான் சொன்னது போல் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வென்றதால் எனக்கு இப்பதவி கிடைத்தது. நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது நீங்கள் தான். இந்த மத்திய அமைச்சர் பதவியே உங்களுக்கு உழைக்கத்தான்.
திருமங்கலம், கம்பம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பணியாற்றும் போது கருணாநிதி, தொகுதி நிலவரம் பற்றி என்னிடம் அடிக்கடி கேட்பார். ஆனால், திருச்செந்தூர் தொகுதி தேர்தலின் போது அவர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு. பின், நான் சென்னை சென்றபோது, என் தாயிடம் இது பற்றி கூறினேன். அவர் கருணாநிதியிடம், "அழகிரி உங்கள் மீது கோபமாக இருக்கிறான்' என்றார்.
கருணாநிதி என்னிடம், "என்னடா கோபம்' என்றார். நான், " தொகுதி நிலவரம் குறித்து என்னிடம், ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே' என்றேன். அவர், " நீ வெற்றி பெற்று விடுவாய் என்பது தெரியும்' என சாதுர்யமாகக் கூறினார். இந்த சாதுர்யத்தை அவரிடம் கற்றேன்.என்னைப் பற்றி இப்புத்தகம் எழுதியதால், எதிர்காலத்தில் பிரச்னை வரலாம் என ரத்தினவேல் நினைத்திருக்கலாம். ஆனால், நான் சொல்கிறேன்; 2011க்கு பின் அ.தி.மு.க.,வே இருக்காது; இதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.
Wednesday, January 27, 2010
முதல்வர் கலைஞரின் சாரதியான டி ஆர் பாலு
1971-ல் நான் திருமணம் நடத்தி வைத்தவர் இப்போது எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்றும் இன்னொருவர் பேரனுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்கள்.
இது போன்ற கடிதங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே மணமக்கள் திருமணத்திற்கு பிறகு அவரவர் வேலை பார்த்துக் கொண்டு அவர்கள் பரம்பரையை கவனித்து கொண்டு இருப்பதுதான் நல்லது. இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கோபு பேசும் போது, அரசியலில் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து திருமண விழாக்களில் பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த பண்பாட்டை உறவினர் திருமணத்தில் மட்டும் அல்ல. கருணாநிதி வீட்டு திருமணத்திலும் கடைபிடிக்க வேண்டும். பண்பாடு என்பது பொதுவானது. அது ஒரு வழிப்பாதை அல்ல. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும். இதை அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்களுக்கும் இந்த அறிவுரையை வழங்குவார் என்று நம்புகிறேன்.
டி.ஆர்.பாலு கோபக்காரர் என்று கூறினார்கள். ஆனால் அவரது கோபம் உடனே தணிந்து விடும். ஒருமுறை அவர் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டார். நான் வேறு ஒரு தொகுதியில் நிற்கும்படி கூறினேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அதே தொகுதியில் அவர் நிற்கலாம் என்று கூறி அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கும் கோபப்பட்டார். ஏன் இவ்வளவு தாமதமாக தந்தீர்கள் என்று கோபப்பட்டார்.
அவர் குணத்தை அறிந்துதான் அவருக்கு பாலு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பால் கொதிக்கும் தண்ணீர் விட்டால் தணிந்து விடும். அடிக்கடி அவர் கோபப்பட்டாலும், அவருக்கு எப்படி தண்ணீர் தெளித்து அடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
நான் சொன்னது அனைத்தையும் கேட்கும் அருமை தம்பி பாலு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட காலத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கழக தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆட்சியும் கலைக்கப்பட்டது.
இதனால் எனக்கு கார் ஓட்டிய சில டிரைவர்கள் வேலையை விட்டு போய் விட்டார்கள். ஒருமுறை அன்பகத்தில் இருந்து காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது அண்ணா அறிவாலயம் கட்டப்படவில்லை. அந்த இடத்திற்கு கார் வந்தபோது டிரைவர் திடீரென்று இறங்கினார். நான் வேலை விட்டு போகிறேன் என்று கூறினார். வீடு வரை வாருங்கள் என்று சொன்ன போதும் அவர் அதை கேட்கவில்லை. பாதியில் என்னை விட்டுவிட்டு போய் விட்டார்.
நான் ஆட்டோ பிடித்து இரவு 12 மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். அதன் பிறகு வெளியூர் சென்றால் எனது காரை கண்ணப்பனும், உள்ளூரில் டி.ஆர்.பாலுவும் ஓட்டினார்கள். அப்போது பாலு மிரட்டப்பட்டார். கைது செய்யப்பட்டார். என்றாலும் எதற்கும் துணிந்த, எனக்காக எதையும் செய்யும் தம்பியாக அவர் இருக்கிறார்.
இந்த இயக்கம் இத்தனை ஆண்டுகள் எத்தனையோ சோதனைகளை தாண்டி தாக்கு பிடித்திருக்கிறது என்றால், இந்த இயக்கம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் எதற்கும் துணிந்த டி.ஆர்.பாலு போன்ற தொண்டர்கள் இதில் இருப்பதால்தான். திராவிட இயக்கம் ஜனநாயகத்தை காக்கவும், இந்தியாவை வாழவைக்கவும் தோழமை கட்சிகளுடன் உழைத்து வருகிறது.
இந்த நாட்டில் மத நல்லிணக்கத்தை வேரூன்ற செய்யவும், மதவாதத்தை கிள்ளி எறியவும், ஏழை- எளியவர்கள் வளம் பெறவும் நாம் பெரிய சக்திகளை எதிர்த்து போராட முடிகிறது என்றால், அதற்கு காரணம் பாலு போன்ற தொண்டர்கள் இருப்பதால்தான். அவரது இல்ல திருமணத்தில் இல்லை எனது இல்ல திருமணத்தில் மணமக்கள் எல்லா நலமும் பெற வாழ வாழ்த்துகிறேன்.
Tuesday, January 26, 2010
தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது
Sunday, January 24, 2010
நாகர்கோவிலில் கவிஞர் கயல்விழி அழகிரி
ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, நெடுஞ்செழியன், சற்குரு கண்ணன், ராஜேந்திரன், சிற்றார் ரவிச்சந்திரன், மனோ தங்கராஜ், ஆசைதம்பி, மணி,அழகம்மாள்தாஸ், வக்கீல் கனி, மற்றும் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
Wednesday, January 20, 2010
விரைவில் அ.தி.மு.க. தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும்
தலைவர் கருணாநிதியை தலைவராக ஏற்று நான் இன்று தி.மு.க.வில் இணைக்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Monday, January 18, 2010
பொதுப்பணித்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் நடவடிக்கை
தோவாளை சானல் உடைப்பை சீரமைக்கும் பணி
மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி
இந்த நிகழ்ச்சியில் ஹெலன் டேவிட்சன் எம்.பி, கன்னியாகுமரி பங்கு தந்தை லியோன் எஸ்.கென்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி தி.மு.க. செயலாளர் ஜே.ஜே.ஆர். ஜஸ்டின், ஆர்.டி.ஓ. நடராஜன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அதிகாரி பவானி ஸ்ரீஜா, கொட்டாரம் பேரூராட்சி தலைவர் யோபு, வார்டு கவுன்சிலர்கள் மெல்பின், சகாய பரிமளதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Monday, January 11, 2010
பொய்யே உன் பெயர்தான் ஜெயலலிதாவோ?
Sunday, January 10, 2010
தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சிற்கே இடமில்லை
சமீபத்தில் வெளியான ஒரு வாரப்பத்திரிகையில் தி.மு.க.-காங்கிரஸ் உறவை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மந்திரி ப.சிதம்பரம் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது போல் குறிப் பிட்டுள்ளார்கள்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் நிறைவேற்றி வரும் சாதனைகளை சொல்லி கடந்த 10 இடைத்தேர்தல்களில் வெற்றி வாகை சூடியுள்ளோம். இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணி.
இந்த கூட்டணியை உடைப்பதற்கு சதி செய்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் கனவு பலிக்காது. சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
தமிழகத்திலும் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
வேறு கட்சிகள் எங்களுடன் இணைய விரும்பினாலும் அதுபற்றி சோனியாகாந்தியும், எங்கள் கூட்டணி தலைவர் கருணாநிதியும் பேசி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் தலைமையை ஆதரிப்பவர் களை நாங்கள் வரவேற்போம்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இந்த இடைத்தேர்தல் மட்டு மல்ல. வரும் 2011 தேர்தலிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
Thursday, January 7, 2010
2,200 கோடியில் தொழிற்சாலை -மத்திய அமைச்சர் அழகிரி
இதன் பயனாக, "வீடியோகான்' நிறுவனம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் கலர் "டிவி' மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளது. தமிழ்நாடு கனிம நிறுவனம், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கருங்கல் வெட்டுதல் மற்றும் மெருகேற்றும் பிரிவை துவக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் முயற்சியால், இந்தோனேஷியா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு தொழில் நிறுவனம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர்கள், ஸ்டீல் அலாய்ஸ், போர்ஜிங்ஸ் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில், ஏ.டி.சி., டயர்ஸ் என்ற நிறுவனம், கடந்த மாதம் உற்பத்தியை துவக்கியுள்ளது. இவ்வாறு கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, January 5, 2010
முதல்வர் கலைஞரின் கேள்வி பதில்கள்
இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
Monday, January 4, 2010
Saturday, January 2, 2010
மக்கள் நலனுக்காகவே ஆட்சி - முதல்வர் கருணாநிதி
மக்களின் கருத்து:
தினமலரில் வெளியான மக்களின் கருத்துகள்
K kanmani,Chennai,India
ஒரு ரூபாய் அரிசி சாப்பிடுற வயசான பாட்டிக்கு தான் தெரியும், பசியின் வலி. பொல்லாக்கு பேசும் புரம்போக்குக்கு தெரியாது.
டிவிக்கு அடுத்தவீடுக்கு ஓடிபோகும் குழந்தைகளுக்கு தெரியும், அங்கிருந்து விரட்டியடிக்கும் போதுள்ள வலி, உனக்கு தெரியாது.
சாராயம் நிறுத்தினா, கள்ள சாராயம் பெருகும், பல பேரின் தாலி இறங்கும். அந்த வலி கணவனை பறிகொடுத்த பெண்ணுக்குத்தான் தெரியும், புறம் சொல்லும் உனக்கு தெரியாது.
G ஸ்ரீதர்,California,United States
டான்சி நிலம் கொள்ளையடிக்கும் பொது இல்லாத ரோசம்,
அரசு பணம் ஊழல் பண்ணும்போது வராத ரோசம்,
கும்பகோணம் கொலை நடந்த போது வராத ரோசம்,
தருமபுரி கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்தபோது வராத ரோசம்,
ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ஏக்கர் கொடநாடு எஸ்டேட் வாங்கின போது வராத ரோசம்,
காஞ்சி சங்கரர் மேல் கொலை குற்றம் சொன்னபோது வராத ரோசம்,
அரசு பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழும்போது வராத ரோசம்,
எத்தனையோ பேர்களை கொலைசெய்து சொத்துக்களை கைப்பற்றியபோது வராத ரோசம்,
ஜெயா ஆட்சிகாலத்தில் நடந்த இடைத்தேர்தல் நடந்தபோது வராத ரோசம்,
ஜெயா ஆட்சியில் சட்டசபையை சந்தை சபையாக நடத்தியபோது வராத ரோசம்,
ஜெயா ஆட்சியிலிருந்தபோது, காவிரியை பற்றியோ, பெரியாறு பற்றியோ எந்த நடவடிக்கை எடுக்காத போது வராத ரோசம்,
ஜெ.ஜெ.திரைப்பட நகர் பேர் வச்சபோதோ, சந்தியா பேரில் நினைவுசின்னம் வச்சபோதோ வராத ரோசம்,
இலங்கைதமிழனைப்பற்றி பேசினாலே, பொடாவில் தூக்கிபோடும் நிலை இருந்தபோது வராத ரோசம்,
இன்னும் எத்தனை எத்தனை அவலங்கள் ஜெயா ஆட்சியில் நடந்த போது வராத ரோசம் இப்போது தான் வருகிறது ஒரு சில மரமண்டைகளுக்கு ஏன் தெரியுமா,
ஒரு நல்ல ஆட்சி, மக்கள் ஆட்சி, காமராஜரின் கனவு ஆட்சி, அண்ணாவின் அற்புத தம்பியின் ஆட்சி நடப்பதை பாராட்ட மனசு வேண்டுமல்லவா?
Friday, January 1, 2010
துணை முதல்வரின் உதவி
கங்கா மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு தலைவர் ராஜசேகர், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு தலைவர் ராஜசபாபதி, டாக்டர் சுந்தர்ராஜன் மற்றும் குழுவினர், ஆபரேஷன் செய்தனர். தற்போது அவர், எழுந்து நடக்கும் நிலையில் உள்ளார். மீண்டும் நடக்க ஆரம்பித்த அவரை, துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.
ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், கோவை கங்கா மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்தார். வைத்தியலிங்கம் உட்பட பலரிடமும் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதே திட்டத்தில் விபத்துக்கு சிகிச்சை பெறும் சண்முகசுந்தரம்(65) என்ற நோயாளி, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்.
முதுகெலும்பு வளைந்த ஒரு சிறுமிக்கு சிகிச்சை அளித்தது பற்றியும், ஒரு சில சிகிச்சைகளுக்கு அதிக செலவு ஏற்படுவது பற்றியும் டாக்டர்கள் விளக்கினர். அதுபற்றி விபரம் அனுப்பினால், அதைப் பரிசீலிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுபோன்று, உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் பட்டியலைத் தொகுத்து அனுப்புமாறு மத்திய அமைச்சர் ராஜா அறிவுறுத்தினார். பின், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தி.மு.க., பிரமுகர் கணேசன் என்பவரைப் பார்த்து நலம் விசாரித்தார்.