Saturday, January 2, 2010

மக்கள் நலனுக்காகவே ஆட்சி - முதல்வர் கருணாநிதி


வருவாய்த்துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழ்பவர்களுக்கு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, சிந்தாதிரிப் பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில், பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம், கடந்த 2001, 2002ம் ஆண்டில் நடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. பின் 2004ம் ஆண்டு, "பார்லிமென்ட்' தேர்தலை கருத்தில் கொண்டு, 2003ம் ஆண்டு அரைகுறையாக இத்திட்டம் செயல்படுத் தப்பட்டது. இப்படி தேர்தலுக்காக இல்லாமல், மக்களின் நலனுக்காக நடக்கும் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். குறையில்லாத ஆட்சி எங்கும் இல்லை. குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் இல்லாத ஆட்சி, தானே கெட்டுவிடும் என்ற, திருக்குறளின் பொருள் உணர்ந்து, இந்த ஆட்சி செயல்படுகிறது. குறைகள் இருந்தால் சொல்லுங்கள்; குற்றம் செய்தால் தண்டியுங்கள். அதற்காக, அக்குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி, அதன்மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணுவது சரியல்ல. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மக்களின் கருத்து:

தினமலரில் வெளியான மக்களின் கருத்துகள்

K kanmani,Chennai,India

புத்தன், காந்தி, ஏசுவால் மட்டும் தான் இவ்வுலகை ஆள வேண்டுமென்றால், நடக்க கூடிய காரியமா? வாயால் சொல்வது எல்லோருக்கும் எளிது. காரியத்தில் இறங்கினால் தான் அதன் கடினம் தெரியும். கழுதைக்கும், குதிரைக்கும் வித்தியாசம் தெரியாதவன் தான் கலைஞரை குறை சொல்வான்.

ஒரு ரூபாய் அரிசி சாப்பிடுற வயசான பாட்டிக்கு தான் தெரியும், பசியின் வலி. பொல்லாக்கு பேசும் புரம்போக்குக்கு தெரியாது.

டிவிக்கு அடுத்தவீடுக்கு ஓடிபோகும் குழந்தைகளுக்கு தெரியும், அங்கிருந்து விரட்டியடிக்கும் போதுள்ள வலி, உனக்கு தெரியாது.

சாராயம் நிறுத்தினா, கள்ள சாராயம் பெருகும், பல பேரின் தாலி இறங்கும். அந்த வலி கணவனை பறிகொடுத்த பெண்ணுக்குத்தான் தெரியும், புறம் சொல்லும் உனக்கு தெரியாது.


G ஸ்ரீதர்,California,United States

டான்சி நிலம் கொள்ளையடிக்கும் பொது இல்லாத ரோசம்,
அரசு பணம் ஊழல் பண்ணும்போது வராத ரோசம்,
கும்பகோணம் கொலை நடந்த போது வராத ரோசம்,
தருமபுரி கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்தபோது வராத ரோசம்,
ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ஏக்கர் கொடநாடு எஸ்டேட் வாங்கின போது வராத ரோசம்,
காஞ்சி ச‌ங்க‌ர‌ர் மேல் கொலை குற்ற‌ம் சொன்ன‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
அர‌சு ப‌ண‌த்தில் ஆட‌ம்ப‌ர‌ வாழ்க்கை வாழும்போது வ‌ராத‌ ரோச‌ம்,
எத்த‌னையோ பேர்க‌ளை கொலைசெய்து சொத்துக்க‌ளை கைப்ப‌ற்றிய‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெயா ஆட்சிகால‌த்தில் ந‌ட‌ந்த‌ இடைத்தேர்தல் ந‌ட‌ந்த‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெயா ஆட்சியில் ச‌ட்டச‌பையை ச‌ந்தை ச‌பையாக‌ ந‌ட‌த்திய‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெயா ஆட்சியிலிருந்த‌போது, காவிரியை ப‌ற்றியோ, பெரியாறு ப‌ற்றியோ எந்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்காத‌ போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெ.ஜெ.திரைப்ப‌ட‌ ந‌க‌ர் பேர் வ‌ச்ச‌போதோ, ச‌ந்தியா பேரில் நினைவுசின்ன‌ம் வ‌ச்ச‌போதோ வ‌ராத‌ ரோச‌ம்,
இல‌ங்கைத‌மிழ‌னைப்ப‌ற்றி பேசினாலே, பொடாவில் தூக்கிபோடும் நிலை இருந்த‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
இன்னும் எத்த‌னை எத்த‌னை அவ‌ல‌ங்க‌ள் ஜெயா ஆட்சியில் ந‌ட‌ந்த‌ போது வ‌ராத‌ ரோச‌ம் இப்போது தான் வ‌ருகிற‌து ஒரு சில‌ ம‌ரம‌ண்டைக‌ளுக்கு ஏன் தெரியுமா,
ஒரு ந‌ல்ல‌ ஆட்சி, ம‌க்க‌ள் ஆட்சி, காம‌ராஜ‌ரின் க‌ன‌வு ஆட்சி, அண்ணாவின் அற்புத‌ த‌ம்பியின் ஆட்சி ந‌ட‌ப்ப‌தை பாராட்ட‌ ம‌ன‌சு வேண்டும‌ல்ல‌வா?

No comments:

Post a Comment