Tuesday, January 26, 2010

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது


சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் தங்கபாலு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அப்போது, டெல்லியில் சோனியாவை ஜெயலலிதா சந்தித்ததில் முக்கியத்துவம் உண்டா? தமிழ்நாட்டில் கூட்டணி மாற்றம் வருமா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து தங்கபாலு கூறியதாவது:-

டெல்லியில் சோனியாகாந்தியை ஜெயலலிதா சந்தித்தது சாதாரணமாக நிகழ்ந்தது. தேர்தல் ஆணைய விழாவில் பல தலைவர்கள் பங்கேற்றனர். தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்வது வழக்கமானதுதான். அதேபோலதான் இருவரும் பேசிக்கொண்டனர். இதில் வேறு எந்த முக்கி யத்துவமும் இல்லை. ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கூட்டணி. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த பாதிப்பும் வராது என்று தங்கபாலு கூறினார்.





No comments:

Post a Comment