Tuesday, April 12, 2011

வாக்காள பெருமக்களே வளமான தமிழகம் உங்கள் கையில்!

நாளைய விடியல் மே மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தில் வளமான ஆட்சி மலர நாளை வாக்கு சாவடிக்கு செல்லும் பொழுது சிறிது நிதானமாக சிந்தித்து கடந்த இருபது வருடங்கள் தமிழகத்தில் நடந்த நல்லவைகளையும் தீயவைகளையும் ஆராயிந்து வாக்கு எந்திரத்தில் கையை வையுங்கள்....

கடந்த 2006 முதல் 2011 நடந்த நல்லவைகள் உங்கள் பார்வைக்கு......

* விவசாய பெருமக்களுக்கு 7000 கோடி கூட்டறவு கடன் தள்ளுபடி....

* ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி.....

* இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி.....

* மாதம் தோறும் மலிவு விலையில் பாமாயில், பருப்பு மற்றும் மளிகை பொருள்கள்...

* விவசாய பெருமக்களுக்கு பயிர் கடன் தள்ளுபடி...

* விவசாய தொழிலாளர் நலவாரியம் உட்பட 31 அமைப்பு சார தொழிலாளர் நலவாரியம்.....

* பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் "கல்வி வளர்ச்சி நாள்" என அறிவித்து பள்ளிகளில் கல்வி விழ கொண்ட்டாட்டம் ......

* மாணவ மாணவியர்களுக்கு வாரம் 5 முட்டை அல்லது வாழைபழம்....

* கல்லுரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ்....

* தொழிற்கல்விக்கு நுழைவு தேர்வு ரத்து.....

* தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.....

* 4724 திருக்கோவில்களில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு.....

* திருமண உதவி 25000 ரூபாயாக உயர்வு.....

* ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு தலா 6000 ரூபாய் உதவி.....

* அரசு ஊழியர்களுக்கு 200000 ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் பிதிய காப்பீட்டு திட்டம்.....

* இதய நோய், நீரழிவு நோய், புற்றுநோய் போன்றவற்றிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உடல் பரிசோதனை செய்ய நலமான தமிழகம் திட்டம்......

* உயிகாக்கும் உயர் சிகிட்சைக்கான "கலைஞர் காப்பிட்டு திட்டம்".....

* அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவச சேவை திட்டம்......

* 37 புதிய தொழிற்சாலைகள் மூலம் சுமார் 2,22,569 பேருக்கு வேலை வாய்ப்பு......

*படித்து வேலைவாய்ப்பற்ற இளைன்ஞர்களுக்கு உதவி தொகை......

* நிலவரி குறைப்பு ....

* டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் நீக்கம்.....

* ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கம்......

* கலைஞர் வீடு வழங்கும் திட்டம்......

* கொடுமை காரி ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரபட்ட வேலை நியமன தடை சட்டம் ரத்து, இதன் மூலம் சுமார் 600000 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு.....

* அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.....

*வரும்முன் காப்போம் திட்டம்......

* கண்ணொளி பாதுகாப்பு திட்டம்......

* பச்சிளம், பள்ளி சிறார்களுக்கு இதய பாதுகாப்பு திட்டம்......

* முதல் தலைமுறை பட்டதாரிக்கு கல்வி கட்டணம் அரசே ஏற்றுகொள்ளும்.....

* மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டம்......

* சுயவுதவி குழுக்களுக்கு 9032 கோடி ரூபாய் கடனுதவி.......

* 50 வயது கடந்த திருமணமாகாத பெண்களுக்கு உதவி தொகை.....

* முதியோர், மாற்று திறநாளிகள், கடும் ஊனமுற்றோர், விதவை களுக்கு உதவி தொகை......

* 200000 சத்துணவு தொழிளார்களுக்கு காலமுறை ஊதியம்....

* தமிழுக்கு "செந்தமிழ்" அந்தஸ்து......

இன்னும் சொல்லலாம்......

இது போன்று சாதனைகள் தொடர தி மு மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து சிறப்பான ஆட்சியமைய உங்களின் பொன்னான வாக்குகளை பதிவு செய்யவும்.


Wednesday, March 16, 2011


குமரி மாவட்டம் தி மு க வின் கோட்டை என்பது நிருபணம், கன்யாகுமரி தொகுதியால் தி மு க மீண்டும் கோட்டையில் ஆட்சியை பிடிக்கும் என்பது திண்ணமே......


தமிழக சட்டசபை தேர்தல் ஆகட்டும், அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும், கன்னியாகுமரி தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அதுதான் ஆட்சி அமைக்கும் என்பது பலாண்டுகளாக நிருபணம் ஆகிவருகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சியின் முன்னணியினர் (தளவாய் சுந்தரத்தின்) துரோக செயல்களால் கொதிபடையும் அதிமுக வினர் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாம் தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் ஈர்க்கபட்டு தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று குமரி மாவட்ட அதிமுகவினர் முற்றிலுமாக தி மு வில் இணைந்ததின் காரணமாக இன்று குமரி மாவட்டம் தி மு கவின் கோட்டையாக மாறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அறிக்கை நாயகி துரோகத்தின் மறுபெயர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின் மூலம் கன்னியாகுமரி தொகுதியில் பிரபலம் இல்லாத பச்சைமால் என்பவர் போட்டியிட இருபத்தின் காரணமாக கன்னியாகுமரி மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ள அமைச்சர் சுரேஷ் ராஜன் வெற்றி உறுதி செய்யபட்டுள்ளது.


தளவாய்
சுந்தரத்திற்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டுள்ளது...... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.......




Friday, February 4, 2011

தி மு கவிற்கு ஏன் ஒட்டு போடவேண்டும்?

5 முறை தமிழகத்தின் முதல்வராக தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவரும் தமிழகமுதல்வரின் சாதனைகளை பாருங்கள்.....பின் சிந்தித்து பாருங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று.....

ஒருகோடி ஏழைகளுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.

இலவச கலர் டிவி
இந்தியாவில் முதன் முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

உழவர் சந்தைகள்
மே தினத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை.


மானிய விலையில் மளிகைப் பொருள்கள் மற்றும் 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி.

வருமுன் காப்போம் திட்டம்,
சேலம் உருக்காலை,
நெய்வேலி 2-வது சுரங்கம் மற்றும் மின் திட்டம்,

சென்னையில் டைடல் பூங்கா
குடிசை மாற்று வாரியம்,
குடிநீர் வடிகால் வாரியம்,
கை ரிக்ஷாக்களை ஒழித்தது.

மகளிர் சுய உதவிக்குழு திட்டம்,

தமிழ் -ஆங்கிலம் இருமொழித் திட்டம்,
12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம்

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து

பஸ்கள் நாட்டுடைமை, போக்குவரத்து கழகங்கள் உருவாக்கம்

புதுமுக வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி.
கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் ரத்து

ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்
விதவைகள் மறுமண உதவித் திட்டம்,
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க நிதி உதவி


உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு.
3.5 சதவீத தனி ஒதுக்கீடு,
அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு,
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்,
பெண்களுக்கும் சொத்துரிமை சட்டம்,
அரசுப் பணியில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு.


பெரியார் நினைவு சமத்துவபுரம்
உருது அகாதெமி

குமரி முனையில் திருவள்ளுவர் சிலை
தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது,

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளச்சி நாளாக அறிவித்தது.

வருமான வரம்புக்கு உட்பட்டு பெண்களுக்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.

பிற்படுத்தபட்டோருக்கு 25-லிருந்து 31 சதவீதமாகவும்,
தாழ்த்தப்பட்டோருக்கு 16-லிருந்து 18 சதவீதமாகவும் இட ஒதுக்கீட்டை உயர்த்தியது.

உருது பேசும் முஸ்லிம்கள், கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.

வன்னியர் சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளித்தது.

தமிழ்ப்பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் சலுகை,

மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது. "மெட்ராஸ்' என்பதை சென்னை என மாற்றியது.


இத்தனையும் செய்த கலைஞருக்கு கைகொடுப்போம்.......
வரும் தேர்தலில் தி மு கூட்டணிக்கு வாக்களிப்போம்.........
தமிழா நாம் நன்றி மறவாமல் இருப்போம்.......

Saturday, January 22, 2011

ராஜதந்திரம் என்றால் கலைஞர்தான்


இன்றைய தினமலரில் வந்த ஒரு கட்டுரையில் சில நாட்களுக்கு முன்னாள் மத்திய அரசில் மந்திரி சபை மாற்றியமைக்கபட்டதில் தமிழக முதல்வர் கலைஞரின் ராஜதந்திரம் எவ்வாறு செயல்படுத்தபட்டுள்ளது என்று அருமையாக எழுதியிருந்தார்கள்.

ஆம், தமிழக முதல்வர் ஒரு சிறந்த அரசியல் பண்பாளர் மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரியும் என்பதற்கு எண்ணிலடங்க நிகழ்வுகள் அடங்கும்.

அரசியல்வாதி என்பவர் சிறந்த நிர்வாகியாக இருந்தால் மட்டும் போதாது ஒரு ராஜதந்திரியாகவும் இருக்கவேண்டும் என்பது உலகநியதி. அதை நாம் ஆராய்ந்தால் அது நூற்றுக்கு நூறு கலைஞருக்கு பொருந்தும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாதத்தில் கலைந்து விடும் ஆருடம் சொன்னார்கள் அரசியல் அறிவிலிகள். திமுக ஆட்சியை 5 வருடம் அசைக்க முடியாமல் ஆட்சி செய்தது அவருடைய ராஜதந்திரம்.

அஞ்சாநெஞ்சர் அழகிரிக்கு பதவி கொடுத்து தென் மாவட்டங்களில் நடந்த எல்லா இடை தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அதிமுக, மதிமுக,கம்யூனிஸ்ட் கோட்டைகளை தகர்த்து எறிந்தது அவருடைய ராஜதந்திரம்

இலவசமாக ஏழைகளுக்கு எல்லா நல திட்ட உதவிகளை செய்து, ஏழைகளின் இதயங்களை கவர்ந்து, அவர்களின் ஓட்டு வங்கியை திமுக பக்கம் திருப்பியது அவருடைய ராஜதந்திரம்

ஈழம் பிரச்சினைய கிழப்பி, பாராளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முயன்ற எதிர்கட்சிகளை தோற்கடித்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர உதவி செய்தது அவருடைய ராஜதந்திரம்

திமுக வை விமர்சித்து பேசிய இளங்கோவனை ஒன்றும் எதிர்த்து பேசாமல் அவரை இப்போது பேசவிடாமல் செய்தது அவருடைய ராஜதந்திரம்

ராஜா, ராஜா என்று ஊடகங்கள் எல்லாம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கும் போது, அமைதியாக அதை எதிர்கொண்டது அவருடைய ராஜதந்திரம்

காங்கிரஸ் உடன், கூட்டு வைக்க ஜெயலலலிதா செய்த முயற்சிக்கு அமைதியா செக் வைத்து, மீண்டும் காங்கிரஸ் உடன்தான் கூட்டணி என்று உறுதி செய்தது அவருடைய ராஜதந்திரம்

இன்னும் எவ்வளவோ அடுக்கிகொண்டே போகலாம்.

இது எல்லாம் கலைஞர் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியம். 60 ஆண்டு கால அரசியலில் எதிர் காட்சிகளுக்கு தண்ணி காட்டி கொண்டு இருக்கும் கலைஞர் இந்திய நாட்டின் சாணக்கியர். எதிர்த்தவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போனது ஒரு சோக கதை. தூற்றுவோர் தூற்றினாலும் 87 வயதிலும் வெற்றி பெற்று கொண்டு இருக்கும் கலைஞர் ஒரு சாணக்கியர் என்பது மறுபதற்கில்லை. மறுத்தவர்கள் அரசியலில் வாழ்ந்ததும் இல்லை.

நாம் போட்ட ஓட்டுல தமிழ் நாடில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்குமே மருத்துவ காப்பீடு, எந்த அரசு குடுத்துச்சு இந்த உலகத்துல? எவனும் யோசிக்க முடியாதத கலைஞர் செஞ்சார், எத்தனையோ ஏழை குடும்பம் 2 லட்சம் வரை ஆதாயம் அடஞ்சுருக்கு. இது போதும் நாம் போட்ட வோட்டுக்கு. குறைகளை மட்டும் பார்க்காமல் நிறைகளை பார்போம்.

தமிழகத்தில் நாளையே ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டு உங்கள் உடமைகளை இழந்து விட்டால், நீங்களும் , உங்கள் குடும்பத்தாரும் கவலை பட வேண்டாம். ஒரு ருபாய் அரிசி, உடுக்க உடை, இருக்க கான்கரிட் வீடு, மருத்துவ காப்பீடு திட்டம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

இதுதான் கலைஞரின் ஆட்சியின் மகத்துவம்.......