Wednesday, March 16, 2011


குமரி மாவட்டம் தி மு க வின் கோட்டை என்பது நிருபணம், கன்யாகுமரி தொகுதியால் தி மு க மீண்டும் கோட்டையில் ஆட்சியை பிடிக்கும் என்பது திண்ணமே......


தமிழக சட்டசபை தேர்தல் ஆகட்டும், அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும், கன்னியாகுமரி தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அதுதான் ஆட்சி அமைக்கும் என்பது பலாண்டுகளாக நிருபணம் ஆகிவருகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சியின் முன்னணியினர் (தளவாய் சுந்தரத்தின்) துரோக செயல்களால் கொதிபடையும் அதிமுக வினர் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாம் தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் ஈர்க்கபட்டு தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று குமரி மாவட்ட அதிமுகவினர் முற்றிலுமாக தி மு வில் இணைந்ததின் காரணமாக இன்று குமரி மாவட்டம் தி மு கவின் கோட்டையாக மாறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அறிக்கை நாயகி துரோகத்தின் மறுபெயர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின் மூலம் கன்னியாகுமரி தொகுதியில் பிரபலம் இல்லாத பச்சைமால் என்பவர் போட்டியிட இருபத்தின் காரணமாக கன்னியாகுமரி மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ள அமைச்சர் சுரேஷ் ராஜன் வெற்றி உறுதி செய்யபட்டுள்ளது.


தளவாய்
சுந்தரத்திற்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டுள்ளது...... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.......