Saturday, September 18, 2010

விஜயகாந்துக்கு சில கேள்விகள்



தே.மு.தி.க., சார்பில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் பேசியதில் இருந்து....

1. எனது விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை வைக்கவிடாமல் தடுத்து விட்டனர்.

என்னது விழுப்புரம் மாவட்டம் உங்க மாமனார் சீதனமா தந்ததோ? அப்ப விழுப்புரம் மாவட்டம் மட்டும் உனது மாவட்டமா....

2. எனது விருதகிரி படத்தை வெளிவரவிடாமல் பல்வேறு வகையில் இடையூறு செய்கின்றனர்.

என்ன ஒரு சுயநலம்......உனக்கு மக்கள் மேல் அக்கறை இல்லை உனக்கு உனது படம்தான் முக்கியம்......

3. செம்மொழி மாநாட்டால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?

தெலுங்கனான உனக்கு தமிழின் மீது எப்படி அக்கறை வரும்...... அதுல கேள்வி வேற......கழுதைக்கு தெரியுமா செந்தமிழ் மாநாட்டின் அருமை......

மாநாட்டு மூலமா என்ன மாதிரி பயன் வேண்டும் என்று நினைக்கிறாய்.......

4. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 66 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 93 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஆட்சியில் வேலை வாய்ப்பு தடை சட்டம் என்று ஓன்று இருந்ததே அப்பொழுது எங்கே சென்றீர்....

5. நான் நினைத்தால் கூட்டணி அமைத்து எத்தனை கோடி வேண்டுமானும் சம்பாதித்திருப்பேன்.

நீங்கள் கட்சி ஆரம்பித்தது அதற்குதானே...... அதுதான் உண்மை..... அடுத்த தேர்தலில் ஜெயிச்சி எதனை கோடி வேண்டுமானாலும் சம்பாதிங்க....... உங்கள் கட்சியின் கொள்கையும் அதுதானோ?

6. இது முப்பெரும் விழா அல்ல; கருணாநிதி ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா

சரி இந்த நல்லாசி கண்டிப்பாக உனக்கு பிடிக்காது.....உனக்கு ஜெயலலிதா ஆட்ச்தான் பிடிக்கும்........சரி உன் கட்சியின் கொள்கை என்ன?

திரு விஜயகாந்த் அவர்களே, முதலில் அரசியல் பேசுவதற்கு முன்பு உங்களது தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள், தேச தந்தை காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் கடைசிவரை தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள், ஆனால் உங்களிடம் அதில் எதுவும் இல்லை, அனைத்து அரசியல் கட்சியையும் குறைசொல்லித்தான் நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள் என்பதை வசதியா மறந்துவிட்டீர்கள், வாரிசு அரசியல் பற்றி பேசும் உங்களுக்கு என்ன தகுதி இருக்குது (சுதிஸ் யாரு, அவனுக்கு ஏது இவ்வளவு பணம் உன் பொண்டாட்டிக்கு என்ன தெரியும் அரசியல பத்தி), கூட்டணியே இல்லை என்ற உங்களுக்கும் இன்று நீங்கள் பேசுவதற்கும் முரண்பாடுகள் நிறைய .உங்களுக்கு என்ன தகுதி இருக்குது என்பதை மேடையில் விளக்குங்கள். தேர்தல் நெருங்க நெருங்க உங்களது பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள்.

முரண்பாடே உன்பெயர்தான் விஜயகாந்தோ?






குமரி மாவட்டம் தி மு க வின் கோட்டை என்பது நிருபணம்



தமிழக முதல்வரின் சீரிய ஆட்சியின் பயனாக தமிழகம் முழுவதும் உள்ள மாற்று கட்சியினர்கள் சாரை சாரையாக தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் அன்றாடம் நடைபெற்றுவருவது நாம் அனைவரும் அறிந்ததே.

குமரி மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சியின் முன்னணியினர் (தளவாய் சுந்தரத்தின்) துரோக செயல்களால் கொதிபடையும் அதிமுகஇனர் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாம் தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் ஈர்க்கபட்டு தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று குமரி மாவட்ட அதிமுகவினர் முற்றிலுமாக தி மு வில் இணைந்ததின் காரணமாக இன்று குமரி மாவட்டம் தி மு கவின் கோட்டையாக மாறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அதை நிரூபிப்பது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடைபெறும் தி மு க முப்பெரும் விழாவில் குமரி மாவட்ட அதிமுகவில் முக்கிய புள்ளியாக வலம் வந்த குமரி ஸ்டீபன் தி.மு.க.வில் சேர உள்ளதுதான்.

கன்னியாகுமரி பேரூராட்சி தலைவராக 2 முறை பதவி வகித்தவர் குமரி எஸ்.ஸ்டீபன். இவர் குமரி மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர், துணை செயலாளர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
1988-ம் ஆண்டு ஜெயலலிதா தனி அணியாக பிரிந்தபோது அவருடன் இணைந்தார். அதன்பிறகு அ.தி.மு.க.வில் தீவிர பணியாற்றினார். 1993-94-ம் ஆண்டுகளில் குமரி மாவட்ட பால்வள தலைவராக இருந்தார்.
2 முறை பேரூராட்சி தலைவராக பணியாற்றிய அவர் 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசலே தனது தோல்விக்கு காரணம் என்று குமரி ஸ்டீபன், பகிரங்கமாக தனது கருத்துக்களை தெரிவித்ததால் ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்தநிலையில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளார். வருகிற 20-ந் தேதி நாகர்கோவிலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் முப்பெரும் விழா நடக்கிறது. இதற்காக கன்னியாகுமரி வரும் கருணாநிதியை சந்தித்து குமரி ஸ்டீபன், தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைகிறார்.
இதுபற்றி குமரி ஸ்டீபனிடம் கேட்டபோது “கடந்த 20 ஆண்டு அரசியல் வாழ்வில் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். என்னிடம் நெருக்கமாக இருந்தவர்களை எனக்கு எதிராக, தேர்தலில் நிற்க வைத்து என்னை தோல்வி அடைய வைத்தார்கள். கட்சிக்காக உழைத்த எனக்கு எந்த பதவியும் தராமல் இருந்தனர். இதனால் எனக்கு மரியாதை தருகின்ற இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளேன். நான் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து சேரவில்லை. ஆனால் தி.மு.க.வில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க.வில் முக்கிய புள்ளியாக வலம் வந்த குமரி ஸ்டீபன் தி.மு.க.வில் சேர உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு முறை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கன்னியாகுமரி வந்தபோது கடலில் ராட்சத கம்புகளை கட்டி அ.தி.மு.க. கொடியை பறக்க விட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியவர் குமரி ஸ்டீபன் என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, September 3, 2010

சாதனை ராணி ஜெயலலிதாவின் சாதனைகள்

நான்கு வருட தூக்கம் கலைந்து கொடநாட்டில் இருந்து கொண்டு அறிக்கைவிடும் அறிக்கை நாயகி வாய்தா ராணி, இன்று தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் அடுத்து முதல்வர் ஆகிவிடலாம் என பகல்கனவு கொண்டிருக்கும் ஊழல் ராணியின் சாதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை. இதோ சில சாதனைகள் சாம்பிளுக்காக ....


டான்சி கொள்ளைய சொல்றதா? அதன் பிறகு கோர்டில் அந்தர் பல்டி அடித்ததை சொல்லவா?

ஊழல்மகாராணி பட்டம் கிடச்சத சொல்றதா?

வாஜ்பாய பதிமூணு நாளில் அரசியல் கொலை செய்து ஆட்சியை கலைச்சத சொல்றதா? அதன் பிறகு தன் வாழ் நாளில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த அந்த பதின்மூன்று நாள்களும் தான் கருப்பு நாள்கள் என்று சொன்னதை சொல்லவா?

பாவப்பட்ட கல்லூரி மாணவிகளை எரிச்சு கொன்னத சொல்லறதா?

ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் வாங்கினத சொல்றதா அல்லது அதில் கட்டப்படும் டீ தொழிற்சாலையை சொல்லுறதா?

மணல் கொள்ளையடிச்சு, தமிழ்நாட்டை கூறுபோட்டத சொல்றதா?

சேஷன் முதல் சுப்ரமணிசாமி வரைக்கும் 'நல்ல காட்சி' காமிச்சத சொல்றதா?

ஒரே கையெழுத்தில் இரண்டு லட்சம் அரசு ஊழியர் டிஸ்மிஸ் பண்ணுனதை சொல்றதா?

சாலை பணியாளர்களை கொலைபட்டினி?

விவசாயிக்கு எலிக்கறி போட்டது?

நெசவாளர்களுக்கு காஞ்சி தொட்டி திறந்தது?

ஐநூறு கோடி செலவில் உலக புகழ் பெற்ற வளர்ப்புமகன் கல்யாணம்?

உனக்கும், உன் சசிக்கும் பெரிய்ய்ய்யய்ய இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டது, பல நூறு கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பதுக்கியது?

ஜோசியன் சொன்னதுக்காக கலைஞரை கொலைமுயற்சி செஞ்சு கைது செஞ்சது..செரீனா கஞ்சா கேஸ், காஞ்சிசங்காரர் கைது, சுதாகரன் கைது,

ராஜபக்சேக்கு ஆதரவு, போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது நியாயம் என்றது?

மகாமகம் படுகொலை..

கருணாநிதி கைது,

மாறன் தாக்கப்பட்டது,

கே.கே.எஸ்.எஸ்.ஆர் முகத்தில் ஆசிட் வீசியது,

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டசபை உள்ளே தாக்கப்பட்டது,

பரிதி வேட்டியை உருவியது,

ஐ.எ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது திரகவகம் வீசியது,

கருணாநிதி கைதை எதிர்த்து நடந்த பேரணியில் நிருபர்கள் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டது,

முன்னாள் தலைமை தேர்தல் கமிசனர் டி.என். சேஷன் விமானநிலையத்தில் சிறை வைக்கப்பட்டது,

சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக சென்னை கோர்ட்டில் மகளிர் அணி சேலையை தூக்கி காண்பித்தது,

மணிசங்கர அய்யரை பாண்டிச்சேரி முதல் காரைக்கால் வரை துரத்தி துரத்தி அடிக்க முற்பட்டது,

ப.சிதம்பரம் மீது செருப்பை வீசியது,

முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி தங்களிடம் தவறாக நடக்க முற்பட்டதாக சொன்னது,

செரீனா மீது கஞ்சா வழக்கு,....

இதெல்லாம் விட முத்தாய்ப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் TNPSC யை மூடி தமிழக இளைஞர் வாழ்வில் மண்ணள்ளி போட்டதை சொல்லவா?

இது போன்று இன்னும் பல நூறு சாதனைகளை சொல்லலாம்.....