Monday, January 18, 2010

பொதுப்பணித்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் நடவடிக்கை


தோவாளை சானல் உடைப்பை சீரமைக்கும் பணி


பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை நீர் தோவாளை சானல் வழியாக பாசனத்துக்கு விடப்படுகிறது. இந்த சானல் நீர் தோவாளை, மயிலாடி, செண்பகராமன்புதூர், சீதப்பால், அழகப்பபுரம், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவிலுள்ள நெற்பயிர் மற்றும் தொட்டப்பயிர்கள் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
தோவாளை சானலில் கடுக்கரை அருகே அனந்தபுரம் என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. 100 அடி நீளத்தில் 25 அடி ஆழத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் சானலிளிருந்து அதிக அளவு தண்ணீர்வெளியேறியது. இதனை தொடர்ந்து தோவாளை கால்வாய்க்குரிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.
உடைப்பு ஏற்பட்ட இடத்தை அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தோவாளை சானலில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சுரேஷ்ராஜன் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அதன் படி மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி

கன்னியாகுமரி அந்தோணியார் தெருவில் மீனவர்கள் வசித்து வரும் பகுதியில் இன்று அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்தில் சிக்கி லூசியான் (வயது 65) என்ற மீனவர் பலியானார்.
இத்தகவல் குறித்து அறிந்ததும் அமைச்சர் சுரேஷ்ராஜன், கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட அமைச்சர் சுரேஷ்ராஜன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்பின்பு தீவிபத்தில் சிக்கி பலியான மீனவர் லூசியான் வீட்டுக்கு சென்ற அமைச்சர் சுரேஷ்ராஜன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்பு விபத்து நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஹெலன் டேவிட்சன் எம்.பி, கன்னியாகுமரி பங்கு தந்தை லியோன் எஸ்.கென்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி தி.மு.க. செயலாளர் ஜே.ஜே.ஆர். ஜஸ்டின், ஆர்.டி.ஓ. நடராஜன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அதிகாரி பவானி ஸ்ரீஜா, கொட்டாரம் பேரூராட்சி தலைவர் யோபு, வார்டு கவுன்சிலர்கள் மெல்பின், சகாய பரிமளதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment