Friday, January 29, 2010

வெற்றியின் ரகசியம் - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

தேர்தலில் தொடர் வெற்றியின் காரணங்கள் குறித்து மதுரையில் நடந்த, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விளக்கினார்.

அவர் பேசியதாவது: ஏழைகளுக்கு உதவத்தான் நான் மத்திய அமைச்சரானேன். வெறும் அழகிரியாக இருந்தால், நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். மத்திய அமைச்சர் எனில் உடனே கேட்பர். குடிநீர், சாலை வசதிகளை உடனே நிறைவேற்றுவர். முதல்வர் கருணாநிதி 1962ல், தஞ்சாவூரில் ஒரு பண முதலைக்கு எதிராக போட்டியிட்டார். நான் அப்போது தேர்தல் பணியாற்றினேன். கருணாநிதி இரவு, பகல் பாராமல் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று பார்வையிடுவார். கட்சி நிர்வாகிகள் அங்கு யாரும் இல்லையெனில் கண்டிப்பார். தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுவார். நான் அவரிடம் கற்றுக் கொண்டதால், தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறுகிறேன்.

சைதாப்பேட்டை (1967) தேர்தல் பணியின் போது, கருணாநிதியை கொலை செய்ய முயன்றனர். அவர் தப்பித்து குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு உதவி செய்தனர். துணிச்சலை நான் அவரிடம் கற்றேன்.திருமங்கலம் இடைத்தேர்தலில், நான் சொன்னது போல் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வென்றதால் எனக்கு இப்பதவி கிடைத்தது. நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது நீங்கள் தான். இந்த மத்திய அமைச்சர் பதவியே உங்களுக்கு உழைக்கத்தான்.

திருமங்கலம், கம்பம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பணியாற்றும் போது கருணாநிதி, தொகுதி நிலவரம் பற்றி என்னிடம் அடிக்கடி கேட்பார். ஆனால், திருச்செந்தூர் தொகுதி தேர்தலின் போது அவர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு. பின், நான் சென்னை சென்றபோது, என் தாயிடம் இது பற்றி கூறினேன். அவர் கருணாநிதியிடம், "அழகிரி உங்கள் மீது கோபமாக இருக்கிறான்' என்றார்.

கருணாநிதி என்னிடம், "என்னடா கோபம்' என்றார். நான், " தொகுதி நிலவரம் குறித்து என்னிடம், ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே' என்றேன். அவர், " நீ வெற்றி பெற்று விடுவாய் என்பது தெரியும்' என சாதுர்யமாகக் கூறினார். இந்த சாதுர்யத்தை அவரிடம் கற்றேன்.என்னைப் பற்றி இப்புத்தகம் எழுதியதால், எதிர்காலத்தில் பிரச்னை வரலாம் என ரத்தினவேல் நினைத்திருக்கலாம். ஆனால், நான் சொல்கிறேன்; 2011க்கு பின் அ.தி.மு.க.,வே இருக்காது; இதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.


No comments:

Post a Comment