Tuesday, May 25, 2010

ஆட்டம் காணும் அ.தி.மு.க. கூடாரம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்    முத்துசாமி தி.மு.க.வில் சேருகிறார்

அ.தி.மு.க. வை பொறுத்தவரை உண்மையான விசுவாசிகளுக்கும், எம்.ஜி.ஆர்.ன் உண்மையான தொண்டர்களுக்கும் மரியாதை என்பது கானல் நீர்தான். மானமுள்ள எந்த அரசியல்வாதியும் அ.தி.மு.க. வில் இருக்க விரும்பமாட்டான் பொதுவாக பெரிய பொறுப்பில் இருக்கும் பெரிய பருப்புகள் மட்டுமே அ.தி.மு.க. வில் வாழமுடியும், மற்றவர்களின் காலை வாருவதிலே குறியாக இருப்பார்கள். முத்துசாமி போன்ற நல்ல அரசியல்வாதிகளால் அ.தி.மு.க. வில் அவமானகளை தாங்கிக்கொண்டு இருக்கமுடியாது என்பது என்போன்றவர்களுக்கு புரியும்.


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் முத்துசாமி தி.மு.க.வில் இணை கிறார் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியானதாகும். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர் முத்துசாமி. பின்னர் 1991-96-ல் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, அந்த பகுதியில் செல்வாக்கு உள்ள பிரமுகர். அ.தி.மு.க. தொண்டர்களிடமும் இவருக்கு நல்ல மரியாதை உள்ளது. தற்போது அ.தி.மு.க. மாநில அமைப்புச்செயலாளராக இருந்து வருகிறார். ஈரோடு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

சமீப காலமாக முத்துசாமிக்கு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்துசாமியும், அவரது ஆதரவாளர்களும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

இந்த நிலையில் முத்துசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் தி.மு.க. வில் சேருகிறார்கள்.

தி.மு.க.வில் சேருவது குறித்து முத்துசாமி இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தி.மு.க.வில் சேரும் முடிவை அறிவிக்கிறார்.

முன்னாள் எம்.பி. வி.கே. சின்னசாமி, ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், ஈரோட்டைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தொண்டர்களுடன் தி.மு.க. வில் இணைகிறார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் முறைப்படி இணைய முத்துசாமி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


ஜெயலலிதாவெல்லாம் திருந்த போவதில்லை.கட்சிக்கு சமாதி கட்டிவிட்டு கொடைநாட்டில் தூங்க போய்விடுவார்.


ஒருவேளை இது நடந்தாலும் நடக்கும் ..........


எல்லோரும் அ.தி.மு.க.வை விட்டு போனாலும் கவலை இல்லை..உனக்கு என்று மன்னர்குடி சொந்தங்கள் உண்டு..அவர்கள் மட்டுமே நமக்கு போதும்..சசிகலாவை அ.தி.மு.க. தலைவர் ஆக்கு...சசிகலா அக்கா பசங்கள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைவர் ஆக்கு..சசிகலா அண்ணன் பசங்களை..செயற்குழு உறுப்பினர் ஆக்கு..சசிகலா ஒண்ணுவிட்ட அண்ணன் பசங்கள கட்சியில் ஒவ்வொரு பதவி கொடுங்கள்..சசிகலாவின் ரெண்டுவிட்ட அக்கா பசங்கள கொள்கை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள்..உங்கள் முன்னாள் வளர்ப்பு மகனையும் கூட வரசொல்லி விடுங்கள்..எல்லாம் சரியாகி விடும்..உண்மையான தொண்டர்களுக்கு இனி என்ன வேலை இருக்கு..அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு...எல்லாமே மன்னார்குடி கும்பலுக்கு மட்டும்தான்..அவர்களை வைத்து நீங்கள் கட்சியை வளர்க்க வாழ்த்துக்கள்.....

ஆனால் இதுதான் உண்மை என்பது எல்லா அ.தி.மு.க காரனுக்கும் தெரியும் ........




No comments:

Post a Comment