நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தல் உள்ள கூட்ட அரங்கில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது.
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கே.பி. ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, சங்கரன் கோவில் தங்கவேல் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் தன்னை நம்பிவருபவர்களை முதல்வர் கலைஞர் கைவிடமாட்டார் என்பது மீண்டும் ஒருமுறை டி.எம். செல்வ கணபதியை தேர்வு செய்ததின் மூலம் நிருபணம்ஆகியுள்ளது. குறிப்பாக மாற்று கட்சியில் இருந்து திமுக-வில் இணையும் தொண்டர்களை ஒருநாளும் கலைஞர் கைவிடமாட்டார் என்பதை முன்னைய காலத்தில் இருந்தே நாம் அறியலாம்.
No comments:
Post a Comment