Friday, March 12, 2010

ஜெயலலிதாவும் அவருடைய அறிக்கையும்



எனது ஆட்சியில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டம், நினைவு இல்லம் அமைக்கப்பட்டது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிடபட்ட அறிக்கையில் (யாரோ காசுக்கு எழுதி கொடுத்து) உள்ள முரண்பாடுகள் போலவே அவரது அரசியல் வாழ்கையும்.

அ.தி.மு.க., ஆட்சியிலும் தியாகிகளுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்பப்பட்டன. வ.உ.சிதம்பரனார் நினைவாக திருநெல்வேலியில் 75 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப் பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப் பள்ளிக்கு அருகிலுள்ள மோர் னப்பள்ளியில் ராஜாஜிக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத் தில் தீரன் சின்னமலைக்கு மணி மண்டபம் அமைக்க மூன்று எக்டேர் நிலம் 19.67 லட்சம் ரூபாய் செலவில் கையகப்படுத்தப்பட்டது. இரட்டை மலை சீனிவாசனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்த மதுரை, திருநகர் இல்லம் நினைவு இல்லமாக உருவாக்கப்படும் என்று அறிவித்தது ஆகியவை, எனது ஆட்சியில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். (அப்படி என்றால் எதுவுமே நிறைவேற்ற படவில்லை)

ராமசாமி ரெட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்க, விழுப்புரம் மாவட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 06.5 எக்டேர் நிலம் எனது ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டு, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்க திட்டமிடப்பட்டது. (சரி இதுவும் நிறைவேற்ற படவில்லை, நல்ல காமெடி! வ.உ.சிதம்பரனார் தவிர யாருக்கும் எதுவும் செய்யப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளார்)

அம்மாடி, நோக்கு என்ன இதில மட்டும் அக்கறை, நீ பாட்டுக்கும் கொட நாட்டிலே குந்திகிட்டு அறிக்கை விட்டுடறே. நீ அவா கட்டின கட்டடத்திற்கு திறப்பு விழா மட்டும் தானே செய்தீர். கோயம்பேடு பஸ் நிலையம், சென்னை மருத்துவமனை என்ன நம்ம அண்ணா, காமராஜ், ராஜாஜி, எம் ஜி ஆர் என்று எல்லோருக்கும் அவர் தான் நினைவு மண்டபம் கட்டினரும்மா நீங்கள் பேசறது ரொம்ப தப்பு வரலாறு எல்லோருக்கும் தெரியும் புது கதை எல்லாம் சொல்லப்படாது.

எம் ஜி ஆர் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் அவருடைய படத்தையே பொது கூட்ட மேடைகளிலே போடவில்லையே. அவருடையே பெயருக்கு எவ்வளவு களங்கம் விளைவித்தீர்கள் என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இனியும் உங்களை நம்ப மாட்டார்கள்.

முதல்வர் கலைஞர் தியாகிகளுக்கு என்ன என்ன செய்தேன் என்பதில் ஒரு சிலவற்றை பட்டியல் இட்டார். அப்படியே இருந்தாலும் உன்னால் வரலாற்று சின்னம் என்ன நிருவப்பட்டது. இருந்த கண்ணகி சிலையை அகற்றியது தான் உன் சாதனை.

அதிமுக தொண்டர்களே சீக்கிரம் சிந்திபீர்!

அனைத்து அதிமுக எம்எல்ஏக்களே உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், உங்கள் தொகுதி 33% சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பிறகு உங்களில் பலபேருக்கு திரும்பவும் சீட்டு கிடைக்காது, ஆகவே இப்போதே அதாவது ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்பே திமுக விற்கு சென்றுவிட்டால், உங்களுக்கு மிகவும் லாபம், மேலும் அதிமுக வில் மரியாதை கொஞ்சம் கூட இல்லை, மேலும் ஒருமுறை தேர்தலில் வென்றவர்களுக்கு மறுபடியும் டிக்கெட் கொடுக்கும் வழக்கம் அதிமுகவில் இல்லை, எப்போதுமே புதுமுகங்களுக்கு தான் சீட்,ஆகவே சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நீங்கள் திமுக விற்கு சென்றால், உங்களுக்கு நிச்சயம் எதிர்காலம் இருக்கும்.




No comments:

Post a Comment