Monday, March 1, 2010

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய துணை முதல்வர்




துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 58 வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். செனடாப் சாலையில் உள்ள வீட்டில் அதிகாலையில் 6.30 மணிக்கு எழுந்து புத்தாடை அணிந்தார். பின்னர், குடும்பத்துடன் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி, தாய் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றார். அங்கிருந்து காலை 7 மணிக்கு தனது வீட்டுக்கு வந்தார். அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் துணை மு தல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கூட்டம் கட்டுக் கடங்காமல் போனதால் போலீசார் அவர்களை வரிசையாக துணை முதல்வருக்கு வாழ்த்துசொல்ல அனுப்பினர்.


வீட்டில் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா கேக் ஊட்டினார்.

அப்போது மகன் உதய நிதி, மகள் தாமரை, மருமகன் சபரீஸ்வரன், மருமகள் கிருத்திகா, பேரன் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் ஆயிரம் விளக்கு தி.மு.க. சார்பில் வீட்டு பந்தலில் வைக்கப்பட்டு இருந்த கேக்கை மு.க.ஸ்டாலின் வெட்டினார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொண்டர்கள் “தளபதி வாழ்க” என்று கோஷமிட்டனர். புதுச்சேரி முதல்- அமைச்சர் வைத்திலிங்கம், மத்திய மந்திரி நாராயணசாமி, புதுச்சேரி சபாநாயகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மத்திய மந்திரி மு.க. அழகிரி, கனிமொழி எம்.பி., மு.க. தமிழரசு ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்:    கருணாநிதியிடம் வாழ்த்து
கவர்னர் பர்னாலா, அவரது துணைச் செயலாளர் விவேகானந்தன் மூலம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை, பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.

தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். எனவே, கட்- அவுட், பேனர்கள் வைக்கப்பட வில்லை. கொடி தோரணங்களும் அதிக அளவில் கட்டப்படவில்லை.

வீட்டுக்கு வந்த தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தினார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்து இருந்த னர். பழங்கள் சீர்வரிசை தட்டுக்களை கொண்டு வந்து கொடுத்தனர்.மேலும் வாழ்த்து தெரி வித்தவர்கள் விவரம் வருமாறு:-

சபாநாயகர் ஆவுடையப்பன், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மத்திய மந்திரிகள் ராசா, ஜெகத்ரட்சகன், நெப்போலியன், தயாநிதி மாறன், காந்தி செல்வன், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழுதி, மதிவாணன், மைதீன்கான், பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி, மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வி.எஸ்.பாபு, ஜெ.அன் பழகன், திருவள்ளுர் மாவட்ட செயலாளர் சிவாஜி, முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், சற்குண பாண்டியன், செஞ்சி ராமச்சந்திரன், செல்வகணபதி, பொன்னுசாமி, ராதிகாசெல்வி, சுப்புலட்சுமி ஜெகதீசன், இந்திரகுமாரி, முன்னாள் எம்.பி.க்கள் எல். கணேசன், குப்புசாமி, பு.த. இளங்கோவன், எம்.பி.க்கள் சுகவனம், ஜெயத்துரை, கிருஷ்ணசாமி, அசன் முகமது ஜின்னா.

சட்டசபை கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், சிவபுண்ணியம், அனிதா ராதாகிருஷ்ணன், தாம்பரம் ராஜா, அப்பாவு, கிருஷ்ணகிரி செங்குட்டுவன், கம்பம் ராமகிருஷ்ணன், யசோதா, விஷ்ணுபிரசாத், விடியல் சேகர், காயத்திரி தேவி, ராணி வெங்கடேசன், சிறுபான்மை நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னதுரை, பேராயர் எஸ்றா சற்குணம், முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கிட்டு, நிர்வாகிகள் ஆர்.டி. சீதாபதி, ஆலந்தூர் பாரதி, துறைமுகம் காஜா, தொ.மு.ச. பொருளாளர் சிங்கார ரத்தினசபாபதி, பெரம்பூர் பகுதி பொருளாளர் எஸ்.பி. கணேசன், இந்திய முஸ்லிம்லீக் சென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன்.

சென்னை கலெக்டர் ஷோபனா, அதிகாரிகள் தீனபந்து, இறையன்பு, ராஜேந்திரன், முத்துசாமி, காமராஜ், ராஜேஷ் லக்கானி, இளங்கோ, உமாமகேஸ்வரி, ராஜாராமன், ரகுபதி, செல்லமுத்து, ஜேக்கப், முன்னாள் அதிகாரி காசி விசுவநாதன், போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண், கமிஷனர்கள் ராஜேந்திரன், ஜாங்கிட், போலீஸ் அதிகாரிகள் சுனில்குமார், சேஷாயி, ரவி, நடராஜன், ஜார்ஜ், துரைராஜ், சிவனாண்டி, ரத்தினவேல்.

எம்.ஏ.எம்.ராமசாமி, மியாட் மருத்துவமனை இயக்குனர் மோகன்தாஸ், காசிமுத்து மாணிக்கம், சுப.வீரபாண்டியன், என். ஜி.ஓ. சங்க தலைவர் சூரியமூர்த்தி, ஆசிரியர் மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ். நடிகர்கள் ரவிச்சந்திரன், எஸ்.வி.சேகர், தியாகு, சந்திரசேகர், வினாயகா மிஷன் சேர்மன் சண்முகசுந்தரம்.

திருவண்ணாமலை இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் 58 பேர் சீர் வரிசை தட்டுகளுடன் வந்து வாழ்த்தினார்கள்.

அன்பகம் கலை, ஐ.கென்னடி, ரூசோ, சிட்கோ வாசு, வி.எஸ்.ராஜு, கண்ணன், அன்புதுரை, ஆர்.டி. சேகர், வி.எஸ்.ரவி, மதன்மோகன், ஏழுமலை, மகேஷ்குமார், ரங்கநாதன், தெரு வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் அலிமா சம்சுகனி உள்பட ஏராளமானோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, அமைச்சர் அன்பழகன், மத்திய மந்திரி ஜி.கே.வாசன், நடிகர் ரஜினி காந்த், பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் ஆகியோர் டெலிபோனில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பல்லாவரம் மோகன், காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. வில் சேர்ந்தார்.

இது போல் விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் முருகேசனும், மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து இன்று தி.மு.க.வில் இணைந்தார்.



































No comments:

Post a Comment