Tuesday, March 23, 2010

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்! - ஜெயலலிதா



ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்..... வர வர ஜெயலலிதாவுக்கு ரெம்ப காமெடி வருகிறது. நேற்று பென்னாகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது சில காமெடி முத்துகளை சிதறவிட்டு சென்றுள்ளார்.


பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட குரும்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, டெம்போ டிராவலர் வேனில் அமர்ந்தபடி ஜெயலலிதா பேசியதாவது: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக துவங்கப்படவில்லை.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். அதன்படி, அந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை பெறுவதற்காக நான் ஜப்பான் சென்றிருந்தேன். அங்குள்ள வங்கி அதிகாரிகளிடம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை எடுத்துக்கூறினேன்.

அப்போது நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜப்பான் நாட்டு வங்கி அதிகாரிகள் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து நிதிஉதவி அளிக்கவும் ஒப்புக்கொண்டனர். தொடக்கத்தில் இந்த திட்டத்திற்கு ரூ.1,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு திருத்திய மதிப்பீடாக ரூ.1938 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்து தர்மபுரியில் நடந்த விழாவில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். அப்போது இருந்து பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மடம் என்ற கிராமத்தில் இந்த திட்டத்திற்காக பிரமாண்டமான சமநிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை நானே தொடங்கி வைத்தேன்.

இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை என்று ஜெயலலிதா அம்மையார் பொய் பிரசாரம் செய்து வருகிறார். மடம் என்ற கிராமத்தில் நடக்கும் பணிகளை அவர் வந்து நேரில் பார்க்க தயாரா? அதற்கான நாள், நேரத்தை அவரே குறிக்கட்டும். நானும் வருகிறேன். அதைவிடுத்து தேர்தலுக்காக, அரசியலுக்காக தவறான செய்தியை சொல்லி உங்கள் தராதரத்தை மேலும் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

சோம்பட்டி என்ற கிராமத்தில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறவில்லை என்று கூறுபவர்கள் அதை நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலக தயாராக இருக்கிறேன். அந்த திட்டப்பணிகள் நடப்பது உண்மையானால் அதுபற்றி குறை சொல்பவர்கள் அரசியலைவிட்டு விலக தயாரா? என்று கேட்டார்.

இதற்கான பதிலை ஜெயலலிதாவிடம் இருந்து இன்னும் காணோம். அறிக்கை எழுதி கொடுக்கும் அடிமைகள் விடுமுறையில் சென்றுவிட்டனரோ என்னவோ?

இதில் வேறு பென்னாகரத்தை, 'பொன்' விளையும் நகரமாக மாற்றுவோம் என்று அறிக்கை அறிக்கைநாயகியிடம் இருந்து. தேர்ந்து எடுக்கப் போகும் பென்னாகர சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் வெறும் பதினான்கு மாதம்தான். அ. தி.மு.க. வேட்பாளருக்கு ஒட்டு அளித்தால் இந்த குறுகிய காலத்திற்குள் பெண்ணாகரத்தை பொன் விளையும் பூமியாக மாற்றுவோம் என்கிறார் அதன் தலைவர். இப்பொழுது அவர் உறுப்பினராக இருக்கும் தொகுதியில் பொன் விளைகிறதா என்ன? இவரின் சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் எல்லாம் பொன் விளைந்துக் கொண்டு இருக்கிறதா?. இவர் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சராக பத்து ஆண்டுகாலம் இருந்தார். அந்த காலத்தில் எங்கும் பொன் விளைந்ததாக நான் கேள்விப் படவில்லை.

பென்னகர மக்களே இந்தமாதிரி பேச்சைக் கேட்டு ஏமார்ந்து போகதிர்கள். பொன் விளையும் பூமியாக மாற்றுவேன் என்று சொன்னது எதுகைக்காகத்தான். அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளாதிர்கள். காவிரி உங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஓடினாலும் இவர் ஆட்சியில் உங்களுடைய குடிநீர் பிரச்னையை தீர்க்கவில்லை. இவர் ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம். அந்த காலத்தில் எந்த பெரிய தொழிச்சாளைகளும் துவங்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

ஏன் தமிழ்நாட்டை கொள்ளை அடித்து மொட்டையடித்து போதாதா இன்னும் சுரண்ட வேண்டுமா? உன் ஆட்சியில் எலிக்கறி சாப்பிட்ட மக்கள் வயிறார உணவு சாப்புடுவது பிடிக்கவில்லியா? நீ சொல்லிட்டு சசிகலாவோடு சென்று விடுவாய் உன்னை யார் கேள்வி கேட்பது? அதான் ஆண்டிபட்டி பார்த்தா தெரியவில்லையா ஒரு நன்றி கூட சொல்ல போகாத உன் யோகிதைதை என்ன சொல்லுவது.

கொடநாடு ராணிக்கு மக்களை பற்றி என்ன தெரியும்? சும்மா சவுடால் விட கூடாது. சாத்தான்குளத்தை தேவன் குளமாக மாற்றுவேன் !!! ஆண்டிபட்டியை அரசன்பட்டியாக மாற்றுவேன் !!! நடந்தது என்ன ? ? ?


No comments:

Post a Comment