Saturday, February 27, 2010

மரத்துப்போன கம்யூனிஸ்ட் கட்சிகள்


http://www.9p.com/games/18225/Hammer_n_Sickle180.gif


பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிக்கப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது மூலம் அவர்களின் கட்சி முதுகெலும்பு இல்லாத ஓன்று என்பதை நிருபித்துள்ளது. சிறுதாவூரில் ஏழை எளிய மக்களின் நிலங்களை ஜெயலலிதா ஆக்கிரமித்துவிட்டார் எனவும், சுரண்டிவிட்டார் எனவும் அவர்கள் போராட்டம் நடத்திய இவர்கள் நிலைமை இன்று என்னவாயிற்று.

முல்லைப் பெரியாறு பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள ஐவர் குழுவில் தமிழகம் பங்கேற்க வேண்டும் என சொல்லும் தா.பாண்டியன். இந்தப் பிரச்னை பற்றி அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில், "மீண்டும் அமைக்கப் பட்டுள்ள ஐவர் குழுவில், தமிழக அரசின் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை என தி.மு.க., பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் நியாயமான காரணம் உள்ளது' என எழுதப்பட்டுள்ளது. இதை, பாண்டியன் படிக்கவில்லையோ? .



No comments:

Post a Comment