பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை இடையில் வந்ததால் அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.பின்னர், பென்னாகரம் தொகுதியில் திருத்திய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஜனவரி 1-ல் தருமபுரியில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இடைத்தேர்தலை சந்திப்பது என்ற தீர்மான முடிவுடன் தி.மு.க.வும், பா.ம.க. தேர்தல் களத்தில் இறங்கியது, மற்றும் வேட்பாளரையும் அறிவித்து முழு வீச்சுடன் தேர்தல் பணியாற்றி வந்தது.
ஆனால், பென்னாகரம் தேர்தலில் அ.தி.மு.க. மட்டும் ஆர்வம் காட்டவில்லை. மேலும், தனது ஆதரவுக் கட்சிகளைத் தூண்டிவிட்டு, வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்று குற்றம்சாட்டியது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. ஆதரவுக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.
ஜெயலலிதா ஆதரவுக் கட்சிகள் மனு அளித்த ஒரு மணி நேரத்துக்குள், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது. அதுவரை திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என்றும் அறிவித்தது.
இதன் மூலம் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.இதனால் தேர்தல் ஆணையம் நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இடைத்தேர்தலை சந்திப்பது என்ற தீர்மான முடிவுடன் தி.மு.க.வும், பா.ம.க. தேர்தல் களத்தில் இறங்கியது, மற்றும் வேட்பாளரையும் அறிவித்து முழு வீச்சுடன் தேர்தல் பணியாற்றி வந்தது.
ஆனால், பென்னாகரம் தேர்தலில் அ.தி.மு.க. மட்டும் ஆர்வம் காட்டவில்லை. மேலும், தனது ஆதரவுக் கட்சிகளைத் தூண்டிவிட்டு, வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்று குற்றம்சாட்டியது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. ஆதரவுக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.
ஜெயலலிதா ஆதரவுக் கட்சிகள் மனு அளித்த ஒரு மணி நேரத்துக்குள், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது. அதுவரை திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என்றும் அறிவித்தது.
இதன் மூலம் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.இதனால் தேர்தல் ஆணையம் நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
No comments:
Post a Comment