தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார்.
தேங்காய் பட்டணம் மீன் பிடி துறைமுகம், புத்தேரி ரெயில்வே மேம்பாலம், அரசு பொறியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.
அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் நிதி வழங்கியும், ஆயுர் வேத கல்லூரியை தொடங்கி வைத்தும் பேசுகி றார். இதற்கான விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
தற்போது அங்கு பிரமாண்ட பந்தலும், மேடை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இன்று நீர் விழாமல் இருக்கும் வகையில் ஆஸ்பட்டாஸ் கூறை அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்கிடையே கூட்டம் நடக்கும் மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாது காப்பு பணிக்கென வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 800 போலீஸ் 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை முதல்-அமைச் சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு குமரி மாவட்டத்துக்கு இப்போது தான் முதல் முறையாக வருகிறார். எனவே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சுரேஷ் ராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
எனவே வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாவட்ட தி.மு.க.வினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment