Saturday, November 28, 2009

தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபடும்; முதல்வர் கருணாநிதியை சந்தித்தபின் தங்கபாலு பேட்டி


முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று சந்தித்தார். காலை 10 மணி முதல் 10.30 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் உடன் இருந்தார்.

பின்னர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

நடைபெற இருக்கும் திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிக்காக காங்கிரஸ் பாடுபடும்.

மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லி பிரசாரம் செய்வோம். இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெறும்.

நேற்று இரவு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் வீட்டின் மீது சில வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் புகார் செய்தோம்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரை அந்த பகுதி போலீசார் கைது செய்து இருப்பதாகவும் முதல்வர் கூறினார். இதுபோன்ற வன்முறை கும்பல்கள் தலைதூக்க விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்தினோம்.

கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசன் மறைவுக்கும் அனுதாபம் தெரிவித்தோம்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.


No comments:

Post a Comment