Sunday, November 29, 2009

தே.மு.தி.க. அவைத் தலைவர் திமு.க.வில் இணைந்தார்



குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. முன்னாள் அவைத் தலைவர் லயன் ராஜன். இவர் இன்று அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் சுரேஷ்ராஜன் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அவருடன் 24-வது வார்டு முன்னாள் கவுன்சிலரும் லயன்ராஜனின் மனைவியுமான ஷீலா மற்றும் அக்கட்சியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இணைப்பு விழா நாகர் கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடந்தது. இதில் ஹெலன் டேவிட்சன் எம்.பி., ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ், வேளாண் விற்பனைக்குழு தலைவர் ஜி.எம்.ஷா, கவுன்சிலர் ஜெயசிங், டேவிட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லயன் ராஜனுக்கு அமைச்சர் சுரேஷ்ராஜன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment