Monday, November 30, 2009

40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் மத்திய அமைச்சர் மு க அழகிரி


திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனும் வந்தவாசி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக கமலக்கண்ணனும் போட்டியிடுகின்றனர்

திருச்செந்தூர் தேரடித் திடலில் இருந்து, மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், ஊர்வலமாகச் சென்று அனிதா ராதாகிருஷ்ணன், மனு தாக்கல் செய்தார். திருச்செந்தூர் ஆர். டி.ஓ., அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ; போன தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா தற்போது போட்டியிடுகிறார். சில அ.தி.மு.,.க வினர் கூறியதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல இப்போதும் தி.மு.க., அ‌மோக வெற்றி பெறும். 40 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

வந்தவாசியில் தி,மு.க.,வேட்பாளர் கமலக்கண்ணன் செய்யாறுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். உணவு துறை அமைச்சர் வேலு தலைமை வகித்தார். செய்யாறு டி.ஆர்.ஓ., நாகராஜனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அமைச்சர் வேலு தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

வந்தவாசி தி.மு.க., வேட்பாளர் கமலக்கண்ணன் இன்று மனு தாக்கல் செய்தாலும், நேற்றே பிரசாரத்தில் இறங்கிவிட்டார். நேற்று அனகாவூர் ஒன்றியத்தில் உள்ள புரிசை, எச்சுர் கிராமங்கள் உள் ளிட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள தி.மு.க., - காங்., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்

No comments:

Post a Comment