மற்ற உரங்களின் உற்பத்தி நின்று போனது.இதனால், தமிழகத்திற்கு தேவையான காம்ப்ளக்ஸ் அடியுரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ பெறும் நிலை ஏற்பட்டது. இதற்கு செலவும் அதிகமானது.இந்நிலையில், மத்திய ரசாயனத் துறை அமைச்சராக மு.க.அழகிரி பொறுப்பேற்றதும், உரத் தட்டுப்பாடு இருப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நலிவடைந்து வரும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தைச் சரி செய்தால், மீண்டும் முழு உத்வேகத்துடன் செயல்படத் துவங்கும் எனக் கூறப்பட்டது. இந்நிறுவனம் முழுமையாக இயங்க மு.க.அழகிரி, 166 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது யூரியா உரம் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் இந்நிறுவனம் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது.இதுகுறித்து நிர்வாக இயக்குனர் எஸ்.முரளிதரன் கூறுகையில், "விவசாயிகளுக்கு சாகுபடிக்கு அடியுரமாக தேவைப்படும் காம்ப்ளக்ஸ் உரம், விஜய் 17:17:17 மற்றும் 20:20, 14:28:14 உட்பட அனைத்து ரக உரங்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மத்திய அமைச்சரின் முயற்சியால், வரும் டிசம்பரில் அவற்றை உற்பத்தி செய்ய நிறுவனம் தயாராக உள்ளது' என்றார்.
2 comments:
good news, thanks for sharing
Thank you for your comments
Post a Comment