Monday, December 14, 2009

யார் துரோகி.....?

எம்.ஜி.ஆர்.,நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், செயல்படாத முதல்வராக எம்.ஜி.ஆர்., உள்ளார். எனவே அவருக்கு பதிலாக தம்மை முதல்வர் பதவியில் உட்கார வைக்க கூறிய துரோகி ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., இறந்து அவர் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்த இடத்தில், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "ஜானகியம்மாள் தான் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதாக கூறினார்.

அது போல அரசியல் அரிச்சுவடி கற்று கொடுத்த ஆசான் கலைஞரை முதுகில் குத்தி காட்டிகொடுத்த எட்டப்பன் தான் வைகோ. இப்படி பட்ட துரோகங்களுக்கு மத்தியில் எல்லா துரோகங்களையும் நெஞ்சில் தாங்கி, எத்தனையோ சோதனையான காலங்களிலும் திமுகவை பெரிய ஆலமரமாக வளர்த்து, உண்மையிலேயே, காமராஜரும், அண்ணாவும், காந்தியும் கண்ட ஒரு நல்ல நாட்டை உருவாக்கி வழி நடத்தி கொண்டிருப்பவர் தான் கலைஞர். தமிழக நண்பர்களே, அரசியல் மன மாச்சரியங்களை கடந்து, விரோத மனப்பான்மையை களைந்து பாருங்கள், கலைஞரின் சமூக தொண்டையும், ஏழைகளின் வாழ்வில் கலைஞரின் பங்கையும். உண்மையிலேய பாராட்ட படவேன்டிய உன்னத மனிதர் கலைஞர். அவருக்கு பிறகும் சரி அவருக்கு முன்பும் சரி, அவருக்கு நிகர் அவர்தான். வாழ்க கலைஞர், வளர்க அவரின் மக்கள் தொண்டு.

தமிழக மக்கள் இந்த கபட வேஷ முன்னாள் நடிகையை மறந்து ரொம்ப நாள் ஆச்சு. கலைஞர்னு ஒருத்தர் இல்லையென்றால் எம் .ஜி. ஆர் .இல்லை .எம். ஜி. ஆரை வளர்த்து விட்டதே கலைஞர்தான் எம்.ஜி.ஆர் துவங்கிய அதிமுக இப்போது அழிவு பாதை நோக்கி வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த பயனுமில்லாத தேச விரோத அதிமுக விரைவில் முற்றிலும் வேரோடும், வேரோடு மண்ணோடும் அழியும். குமரி மாவட்ட அதிமுக தளவாய் சுந்தரம் எனும் துரோகியால் அழிந்தே விட்டது.

No comments:

Post a Comment